மூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா
கோவை:
மருத்துவப்பயன்மிக்க மூலிகைச் செடியை உற்பத்தி செய்யவும், அதனை இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை உலக அளவில் ஏற்றுமதிசெய்யவும், இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியத் தலைவர் ராம்மோகன்ராவ் தெரிவித்தார்.
கோவையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த டாம்கால் நிர்வாக இயக்குநர் ராம்மோகன், நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பக்கவிளைவுகளற்ற மருத்துவமாக இப்போது சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் மாறி வருகிறது. ஆங்கில மருத்துவமுறைகளில் உள்ள மருந்துகளில் பின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க மாற்று மருந்தாகமூலிகைகள் முக்கியத்துவம் வகிக்கின்றன.
இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள் இருக்கின்றன. இவை காடுகளில் பெரும்பாலும் இருப்பதால், அவற்றைஅறுவடை செய்வோர் முறையாக அதனை அறுவடை மேற்கொள்வதில்லை. செடியை வேருடன் பிடுங்கி எடுத்து விடுகின்றனர்.
மருத்துவச் செடியின் எந்த பாகம் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதனை மட்டுமே எடுப்பது தான் சரியான முறையாகும். இது குறித்தஒரு புத்தகம் வெளியிடப்படும்.
மேலும் இந்த மூலிகை செடிகளைப் பயிர் செய்யவும், அதனைப் பாதுகாக்கவும் தனிவாரியம் அமைக்க வேண்டும். ஏற்கனவேஇந்தப் பணியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலை துறையும் ஈடுபட்டுள்ளன.
மூலிகை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சாகுபடி செய்தல், பதப்படுத்துதல், கொள்முதல், அறுவடை, ஏற்றுமதி உள்படபல்வேறு பயிற்சிகளை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.