303 பேர் வேட்புமனுத்தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 303 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. திருச்சி நாடாளுமன்றத்துக்கும் தேர்தல்நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16 ம் தேதி தொடங்கியது. வரும் 23 ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல்செய்யலாம்.
வேட்புமனுத்தாக்கல் செய்யும் நான்காவது நாளான வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 85பேரும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இரண்டு பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இத்துடன் இதுவரை சட்டசபைத் தேர்தலுக்கு 303 பேரும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு பேரும்வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications