தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு
டெல்லி:
வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலின்பேரில் தான் அந் நாட்டுஎல்லைப் பாதுகாப்புப் படையினர் (பங்களாதேஷ் ரைபிள்ஸ்) இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீதுதாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
அந் நாடு பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்புறவுடன் இருப்பதை விரும்பாத தீவிரவாத இஸ்லாமியஅமைப்புகள் இந்த நட்புறவை சிதைப்பதற்காகவே இக் கொடும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் வங்கதேசரைபிள்ஸ் படையினரை தூண்டிவிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், அவர்களின் எண்ணப்படி, இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பெரும் பதிலடி தாக்குதல் நடத்தும். இதையடுத்துஇந்தியாவுக்கும் அதனுடன் நட்புறவுடன் இருக்கும் ஹசீனாவுக்கும் எதிரான பிரச்சாரத்தை வலுப்படுத்தி அவரைமீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுக்க முடியும் என இந்தத் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டன.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் இந்தத் திட்டத்தைப் போட்டு செயல்படுத்தியிருக்கிறது என்பதும் இப்போதுதெரியவந்துள்ளது.
கார்கிலில் சிக்கிய இந்திய ராணுவத்தினரின் கண்களை நோண்டி சித்திரவதை செய்தததைப் போலவே வங்கதேசப்படைகளையும் தூண்டிவிட்டு இந்திய வீரர்களை கொடூரமாகக் கொலை செய்ய வைத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.
இதனால், கடும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்த பிரதமர் இந்த சம்பவம் குறித்து முழு விவரத்தை தாக்கல்செய்யுமாறு எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு உடனடியாகவே கடும் பதிலடி தாக்குதல் தர இந்தியாவால் முடியும். ஆனால், இந்திய ஆதரவாளரான ஷேக்ஹசீனா வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இது இடைஞ்சலாகப் போய்விடும் என்பதால் தனது படைகளைகட்டுப்பாட்டுன் இருக்குமாறு இந்தியா உத்தரவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியப் படைகள் மீதான தாக்குதலுக்கு வங்கதேசஅரசு உத்தரவிடவில்லை. வங்கதேச ரைபிள்ஸ் படையினர் தான் தாங்களாவே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்என்றார்.
இந்த் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் கை உள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு சரியான பதிலடிதந்தால் தான் எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வங்கதேச ரைபிள்ஸ் படையினர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்புப்த்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications