தினத்தந்தியுடன் மோதும் ஜெயலலிதா
மதுரை:
தான் சொல்லாதவற்றை சொன்னதாகவும். சொன்னவற்றை இருட்டடிப்புசெயவதாகவும் தினத்தந்தி நாளிதழ் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தினத்தந்தி நாளிதழ் 20ம் தேதி தான் கூறாத செய்தியை வெளியிட்டதாகக் கூறியுள்ளார்ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
சில பத்திரிக்கைகள் கருணாநிதிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.இது குறித்து நான் கவலைப்படவில்லை. கருணாநிதியைப் போல் தேவையற்றபொய்யான செய்திகளை உள் நோக்கத்தோடு வெளியிடுவதுதான் எனக்குவேதனையளிக்கிறது.
20ம் தேதி தினத்தந்தி நாளிதழில், மக்கள் தீர்ப்புக்கு பின் நான் மீண்டும் நகைகளைஅணிவேன் என நான் தேர்தல் பிரசாரத்தில் கூறாத செய்தியை, கூறியதாகவெளியிட்டுள்ளது.
நான் உத்தமபாளையத்தில் பேசியது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழக முதல்வர்கருணாநிதி 5 ஆண்டு காலத்தில் என் மீது பல பொய்யான வழக்குகள் போட்டு, என்வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டார்.
ஊழல் செய்ததாக கூலி டிவி மூலம் வெளியிட்டு விளக்கியதுதான் கருணாநிதி செய்தசாதனை. நீங்கள் என்னை வெற்றியடையச் செய்தால் நான் மீண்டும் நகைகளைஅணிவேன்.
நான் ஊழல் செய்ததாக கூறி வரும் கருணாநிதி ஆயுத பேர ஊழலுக்கு துணைபோகிறார் என்று நான் பேசாதவற்றை,பேசியதாக தினத்தந்தி நாளிதழ் பொய்யானசெய்தியை வெளியிடுள்ளது.
கருணாநிதியின் விருப்பப்படி அவர் எழுதிக் கொடுத்ததை வெளியிட்டு பத்திரிக்கைதர்மத்தை குழி தோண்டி புதைத்து, மஞ்சள் பத்திரிக்கை நிலக்ைகு தரம் தாழ்ந்து விட்டதுதினத்தந்தி. இது வேதனையானது.
இதுவரை நான் கூறிய செய்திகளை இருட்டிப்பு செய்தார்கள். இப்போது நான்பேசாதவற்றை பேசியதாக வெளியிடுகிறார்கள்.
நகைகள் குறித்த என் நிலையை நான் 1997ம் ஆண்டே கூறிவிட்டேன். நகைகளைநீதிமன்றம் மூலம் மீட்டு அதை விற்று ஏழை, எளிய மக்களுக்கு தான தர்மம் செய்வேன்என நான் கூறியதில் எந்த மாற்றமும் கிடையாது.
தேர்தல் நேரத்தில் எனக்கும் கழகத்துக்கும் அவப்பெயர் ஏற்படும்படியான செய்திவெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனதெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications