சேப்பாக்கத்தில் 2 நாட்கள் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அங்குபிரசாரம் செய்கிறார்.
கடந்த முறை போட்டியிட்டு வென்ற சேப்பாக்கம் தொகுதியிலேயே முதல்வர் கருணாநிதி அவரது இந்த முறையும்போட்டியிடுகிறார். வேட்பாளர்களை திருச்சியில் அறிவித்த கையோடு தற்போது தமிழகம் முழுவதிலும் தேர்தல்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கருணாநிதி.
தமிழக தேர்தல் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி தான். திட்டமிட்டவகையில் அவரது பிரசாரம் உள்ளது.
தனது சொந்தத் தொகுதியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளார். தனி வேனில், தெருத்தெருவாக சென்று ஓட்டு சேகரிக்கவுள்ளார்.
22-ம் தேதி மாலை 5 மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை, ஐயா முதலித் தெருவில் தனது பிரசாரத்தைத் துவக்குகிறார்கருணாநிதி.
பின்னர் அங்கிருந்து தனது தொகுதிக்குள் அடங்கியுள்ள பல்வேறு தெருக்களுக்கும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.












Click it and Unblock the Notifications