ரவுடிக் கும்பல்கள் மோதல்: 2 பேர் சாவு
சென்னை:
இரு ரவுடிக் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இரண்டுரவுடிகளை அவர்களின் எதிரிகள் ஜாம்பஜார் மார்க்கெட்டில் வெட்டிக் கொன்றனர்.இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது.
பம்பாய் சேகர் என அழைக்கப்படும் ரவுடி தனது கூட்டாளியுடன் கடை ஒன்றின் முன்நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு மோட்டார் பைக்குளில் அவரதுஎதிரணியிர் அங்கு வந்தனர். அவர்கள் முகமுடி அணிந்திருந்தினர்.
இவர்கள் சேகரையும் அவரது கூட்டாளியையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக துரத்திச் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டைவீசிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்தபகுதியிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications