மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவிடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத்தலைவர் திருமாவளவன், தங்களது கட்சி போட்டியிடும் 2 வது வேட்பாளர்பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம்:
சமயநல்லூர் (தனி) - கஸ்தூரி சிவசாமி
அவிநாசி - ராதாமணி
மங்களூர் - திருமாவளவன்
தேர்தல் அறிக்கைகள்:
சாதிச்சண்டைகளை ஒழிப்போம்.
தீண்டாமையை வேரருப்போம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோம்.
எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப் பாடுபடுவோம்.
இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் ஆகியவையே எங்களது தேர்தல்வாக்குறுதிகள் என்றார் திருமாவளவன்.
யு.என்.ஐ.