மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவிடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத்தலைவர் திருமாவளவன், தங்களது கட்சி போட்டியிடும் 2 வது வேட்பாளர்பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம்:
சமயநல்லூர் (தனி) - கஸ்தூரி சிவசாமி
அவிநாசி - ராதாமணி
மங்களூர் - திருமாவளவன்
தேர்தல் அறிக்கைகள்:
சாதிச்சண்டைகளை ஒழிப்போம்.
தீண்டாமையை வேரருப்போம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோம்.
எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப் பாடுபடுவோம்.
இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் ஆகியவையே எங்களது தேர்தல்வாக்குறுதிகள் என்றார் திருமாவளவன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications