For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை அரசு மீது தமிழர் கட்சிகள் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என தமிழர் கட்சிகள்குற்றம் கூறியுள்ளன.

தமிழ் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமசிங்கேபோர் ஒன்றுதான் இனப் பிரச்சனைக்கு முடிவு என கூறியிருப்பது அரசுக்கு அமைதிப்பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லை என்பதையே காட்டுகிறது என்றார்.

வேறொரு தமிழ் கட்சி தலைவர் கூறுகையில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும்மக்களுக்கு சண்டை நிறுத்தத்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூற விரைவில் பிரசாரம்மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில் வவுனியாவில் இருக்கும் அகதிகள் முகாமை பார்வையிட 10 கிறிஸ்துவகுருமார்கள் வவுனியா செல்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயமான மதுசர்ச்சை சுற்றி அமைந்திருக்கும் அகதிகள் முகாமை பார்வையிட 10 கத்தோலிக்ககுருமார்கள் செவ்வாய்க்கிழமை வவுனியா செல்கிறார்கள்.

பல தமிழர் கட்சியினரும், கிறிஸ்துவ குருமார்களை திங்கள்கிழமை சந்தித்துபேசவுள்ளனர்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம்இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களை சம்மதிக்க வைக்க குருமார்கள்உதவ வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொள்ளவிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்த சண்டை நிறுத்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்குவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X