ஓவர் தீனி சாப்பிட்ட 200 ஆடுகள் மரணம்
பாரத்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக சாப்பிட்டதால் 200 செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும்இறந்து போயின.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ராஜஸ்தான், கும்பர் தாலுகாவில் இருக்கம் அஜன்குன்சாரா கிராமத்தில் இந்த சம்வம் நடந்துள்ளது.
இறந்து போன வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் மேய்ச்சலுக்காக மேற்கு ராஜஸ்தானிலிருந்துஅழைத்து வரப்பட்டடவை. இவை அதிகமாக சாப்பிட்டதால் இறந்து போயின.
ராஜஸ்தான் கால்நடைத் துறை அமைச்சர் ஹரி சிங் கும்பர் விடுத்த உத்தரவின்படி 10 கால்நடைமருத்துவர்கள் இறந்துபோன 70 ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்
பிரேத பரிசோதனையில் இந்த ஆடுகள் அதிகமான அளவு உணவு உட்கொண்டதால்தான் இறந்தனஎன்பது தெரியவந்தது என்றனர்.
இந்நிலையில் கும்பர் தாலுகாவின் தாசில்தார் பகவத் சிங் கூறுகையில், அருகில் உள்ள உத்திரபிரதேசமாநிலத்தின் எல்லையிலுள்ள ரராத் கிராமத்திலும் 20 செம்மறிஆடுகளும், 5 கால்நடைகளும்இறந்துள்ளன என்றார்.
யு.என்.ஐ.