For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருவழியாய் சைக்கிளை கிளப்புகிறார் மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மே 1-ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தைத் துவக்குகிறார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாளன்றுதான் தனது இறுதி வேட்பாளர் பட்டியலை ஒரு வழியாக அறிவித்தது.

தற்போது அக்கட்சியின் தலைவர் மூப்பனார் தனது தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகி வருகிறார். இதுகுறித்துஅக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெயந்தி நடராஜன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 1ம்தேதி முதல் மூப்பனார் தமிழகத்தில் தனது தேர்தல் பிரசாரத்தைத் துவக்குவார்.

தமிழகம் முழுவதும் அவர் பிரசாரம் செய்வார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து அவர் பிரசாரத்தில்ஈடுபடுவார். பிரசாரத்திற்கு சோனியா வருவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

பாண்டிச்சேரியில் தனி அணியாக காங்கிரஸும், தமிழ் மாநில காங்கிரஸும் போட்டியிடுவதால் தமிழகத்தில்அதிமுகவுடான கூட்டணியில் எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் தோல்வி காத்திருக்கிறது.

பொது வாழ்வில், அரசியலில் பெண்களுக்கு உரிய மரியாதை இன்னும் கிடைக்கவில்லை. அவர்களால்சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை நிலவுவதால்தான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு சீட் ஏதும்ஒதுக்கவில்லை என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X