சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீர் தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை 14 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கட்டத்தின் 9வது மாடியில் திங்கள்கிழமை பகல் 1 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. மாடி முழுவதும்புகை பரவியது.
இதனால் எல்.ஐ.சி. கட்டடம் இருக்கும் அண்ணா சாலையும் மிகவும் பரபரப்பானது. அண்ணா சாலையில்வாகனத்தில் போவோர் வருவோர் என அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீயணைக்கும் படை வீரர்கள் 11 வண்டிகளில் விரைந்து வந்து, அரை மணி நேரத்திலேயே தீயை அணைத்துவிட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
உயரமான கட்டிடங்களில் தீயை அணைக்க உதவும் "ஸ்கை லிப்ட்" என்று அழைக்கப்படும் ராட்சததீயணைக்கும் இயந்திரம் இங்கு பயன்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications