For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

தமிழகத்தின் தென்மாவடங்களில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்று மதுரை.அங்குள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மிகப் புகழ் பெற்றது.

சக்திதேவியான பார்வதி வீற்றிருக்கும் எல்லா தலங்களிலும் மிகச் சிறப்பாககருதப்படுவது 3 திருத்லங்கள். அவை காஞ்சி காமட்சி, மதுரை மீனாட்சி, காசிவிசாலட்சி ஆகியவை,

ஆனால் இந்த 3 திருத்தலங்களில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலிலிசித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக, மிகச் சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்

சித்திரைத் திருவிழா கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கும். இந்த ஆண்டுபுதன்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழாதொடங்கியது.

புதன்கிழமை காலை 10 மணியளவில் கோவிலில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சவ சன்னிதியிலிருந்து அம்மனும், சுவாமியும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுகொடியேற்ற மண்டபத்திற்கு சுமந்து வரப்பட்டனர்.

காலை 10.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதன்கிழமை இரவு கற்பக விருட்சவாகனத்திலும், சிம்க வாகனத்திலும் அம்மனும்,சுவாமியும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X