பாண்டிச்சேரியில் 6 பேர் வேட்பு மனு வாபஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தவர்களில் 6 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அடுத்தமாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கானவேட்புமனு தாக்கல் இந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் இந்தமாதம் 23ம் தேதி முடிவடைந்தது.
வேட்புமனு பரிசீலனை இந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. வேட்புமனுவை வாபஸ்பெற விரும்புபவர்கள் 26ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ள கடைசி நாள்என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தவர்களில் 6 பேர் வியாழக்கிழமையன்று தங்கள் வேட்புமனுவை வாபஸ்பெற்றுக் கொண்டனர்.
வேட்புமனுவை வாபஸ் பெற்ற 6 பேரில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி வேட்பாளரான பத்மநாபன். மற்ற 5 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள்.
யு.என்.ஐ.