இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்போம்: காங். தேர்தல் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆங்கிலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்திக்கும் கொடுப்போம் எனகாங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கையை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகாங்கிரஸ் தலைமையகத்தில் வெளியிட்டார். அப்போது முன்னாள் தமிழக காங்கிரஸ்தலைவர் தங்கபாலுவும், தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்உடனிருந்தனர்.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகள்:

ஆங்கிலத்திற்கு அளிக்கப்படும் அதே அளவிலான முக்கியத்துவம் இந்தி மொழிக்கும் அளிக்கப்படும், சீரழிந்தநிலையில் இருக்கும் ஊராட்சி அமைப்புகளை சீராக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும், ஊழலற்ற அரசைமாநிலத்தில் அமைப்போம்.

மத்தியில் பா.ஜ.கவின் தலைமையில் இருக்கும் தே.ஜ.கூட்டணி அரசை பதவி விலகச்செய்வோம்;

பொதுவாழ்வில் நேர்மை;

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம்;

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்வோம்;

இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைஎடுப்போம். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், சோனியாகாந்திதமிழகத்திற்குப் பிரசாரத்திற்கு வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை.

காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமே சோனியா காந்தி பிரசாரம் செய்வாரா என்பது குறித்து முடிவாகவில்லை.இருபினும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சோனியா பிரசாரத்தில் கலந்து கொள்வார்.

அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும். கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா, சட்டீஸ்கர் முதல்வர் அஜீத்ஜோகி ஆகியோரும் பிரசாரத்திற்கு வருகின்றனர் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+