For Daily Alerts
Just In
இந்தியரைக் கொன்ற அமெரிக்கருக்கு 20 ஆண்டு சிறை
வாஷிங்டன்:
விர்ஜினியாவில் இந்தியரைக் கொன்ற அமெரிக்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1995-ல் வர்ஜினியாவில் நடந்த படுகொலைச் சம்பவத்தில் கைதான ஸ்டெர்லிங் ஃபிஷர் என்பவர் குற்றவாளிதான்என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்போது தீர்ப்பளித்துள்ளது.
வர்ஜினியாவில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த 39 வயதான இந்திய அமெரிக்கர் பரம்ஜித் சிங்கைக்கத்தியால் குத்திய ஃபிஷர், அந்த பங்க்கில் இருந்த 150 டாலர்களையும் கொள்ளையடித்துள்ளார்.
தான் பரம்ஜித் சிங்கைக் கொல்லவே இல்லை என்று ஃபிஷர் வாதாடிய போதும், கொலைக்கான பல வலுவானஆதாரங்களும் சாட்சிகளும் ஃபிஷர் தப்புவதற்கே வழி இல்லாமல் செய்துவிட்டன.
31 வயதான ஃபிஷருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற கொலைகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Saturday, April 28, 2001, 5:30 [IST]