For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மை காய்ந்தால்தான் ஓட்டுப் போட முடியும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில், கையில் தடவப்படும் அழியாத மை காய்ந்தபின்தான் ஓட்டுப்போட அனுமதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி மிருதுயுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பல வாக்காளர்களும் கள்ள ஓட்டுப் போடுகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இந்தக் கட்சியினர்தான் என்றில்லாமல் எல்லாக் கட்சியினருமே கள்ள ஓட்டுப் போட்டதைப் பெருமையாக வேறுசொல்லிக் கொண்டு வந்தனர்.

இந்தக் கள்ள ஓட்டைத் தடுக்க, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புது வழி ஒன்று கையாளப்பட இருக்கிறது என்றுதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறினார்.

ஓட்டுப் போடுவதற்கு முன் வாக்காளர்களின் விரலில் அழியாத மை தடவப்படும். இது காய்வதற்கு முன்பேவாக்காளர்கள் ஓட்டுப் போட முடியும் என்ற நிலை கடந்த தேர்தல் வரை இருந்தது.

இதனால் வாக்காளர்கள் உடனே மையை அழித்துவிட்டு கள்ள ஓட்டுக்களைப் போட்டு வந்தனர்.

ஆனால் இந்தத் தேர்தலில், மை நன்றாகக் காய்ந்த பின்புதான் ஓட்டுப்போட வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும், வாக்குச் சாவடியில் பணிபுரியவிருக்கும் அரசுஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சாரங்கி.

ரேஷன் அட்டையைக் காண்பித்து ஓட்டு:

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கார்டைக் காண்பித்து ஓட்டுப் போடலாம் என்றும் தேர்தல்அதிகாரி சாரங்கி கூறினார்.

  • ரேஷன் அட்டை 1.1.2001க்கு முன் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  • ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் புகைப்படம் மட்டுமே இருக்கும். அவரே தன் குடும்ப

  • உறுப்பினர்களை அடையாளம் காட்டி, அவர்களை வாக்களிக்கச் செய்யலாம்.

  • தவிர்க்க முடியாத காரணங்களால் குடும்பத் தலைவர் வரமுடியாவிட்டாலும், வீட்டில் பெண்கள் மற்றும்

  • ஓட்டுப்போடும் தகுதியுள்ள அனைவரும் ரேஷன் அட்டையைக் காட்டி வாக்களிக்கலாம் என்றார் சாரங்கி.
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X