யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: சுவாமி கணிப்பு
கோவை:
வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அப்போது தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும்அணியை உருவாக்குவேன். எங்கள் கட்சி அதில் முக்கிய இடம் பெறும் என்றார் அகில இந்திய ஜனதா கட்சித் தலைவர்சுப்ரமணியசாமி.
தேர்தல் பிரசாரம் செய்ய கோவைக்கு வந்த அகில இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, விமான நிலையத்தில்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களையே கூறி வருகின்றனர். இருவருமே ஊழல்செய்பவர்கள்தான்.
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோதும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சி செய்தபோதும் தமிழகத்தில்பொருளாதார வளர்ச்சி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பொருளாதாரம் பின் தங்கி விட்டது.
கல்வியில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தக் கோரி நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இதற்கான விசாரணை மே4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இதை ஏன் செய்யவில்லை?
நாங்கள் ஜனதா கட்சி சார்பில் 30 இடங்களில் போட்டியிடுகிறோம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்ததேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.
அப்போது தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் அணியை உருவாக்குவேன். எங்கள் கட்சி அதில் மு முக்கிய இடம் பெறும்.
தமிழ்நாட்டில் போலீஸ் சங்கம் அனுமதிக்க கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அரசு போலீஸ் சங்கம் அமைக்கக்கூடாது எனஉறுதி மொழி எழுதி வாங்கிக் கொண்டது.
இந்த நிலையில் இப்போது திமுக போலீஸ் சங்கம் அமைக்கப் பாடுபடுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
ஜெ மனுதள்ளுபடி செய்யப்பட்டது போலவே கேரளாவில் பாலகிருஷ்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வீரப்பனை பிடிக்க முடியவில்லை என்பதற்காக மற்ற திருடர்களையும் விட்டு விட முடியாது.
ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனையின் காலம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மூலம் இன்னும் 18 ஆண்டுகளுக்குமுதல்வராக முடியாது. மத்தியில் சோனியாவுக்கும் வாஜ்பாய்க்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications