பா.ஜ.கவை வீழ்த்துவோம்: மார்க்.கம்யூ.
கோவை:
இந்து ராஷ்டிரம் என வலியுறுத்தும் பாரதிய ஜனதாக் கட்சியிடம், தமிழகத்தின் தனித் தன்மையை எப்படி திமுக காப்பற்றப்போகிறதுஎன அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வினா எழுப்பினார்.
கோவை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கருணாகரனை ஆதரித்து அகில இந்தியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பேசியதாவது:
பாரதிய ஜனதாக் கட்சியின் கொள்கை இந்து ராஷ்டிரம் என்பது தான். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதி,எப்படி அவர்களிடமிருந்து தமிழ்நாட்டின் தனித் தன்மையைக் காப்பாற்ற போகிறார்? பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இரண்டுவிஷயங்கள் முக்கியமானவை.
முதலாவது அந்தக் கட்சி நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான மதவாதக் கட்சி. இரண்டாவது நாட்டின் பாதுகாப்பைகேள்விக்குறியாக்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சக்தியாக விளங்கும் பாரதிய ஜனதாவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை யாரையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதற்கு பா.ஜ ஆட்சியில் நடக்கும் ஊழல் ஒருகாரணமாகத் திகழ்கிறது. சுங்கத் துறையில் வர்மாவின் ஊழல், தொலைபேசித் துறையில் 1300 கோடிரூபாய் ஊழல், இப்போது பங்குச்சந்தையில் ஊழல், ஆயுத பேரத்தில் ஊழல் என அனைத்திலும் சிக்கியுள்ளது.
இந்த முறை 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை நீக்க வேண்டும்என மக்கள் மனதில் எண்ணம் எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், ஒவ்வொரு தொகுதியும் தன்னுடைய தொகுதியாக நினைத்துபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி என்றார் அவர்.