நானும் ஒரு தொழிலாளிதான்... கருணாநிதி பெருமிதம்
சென்னை:
நான் ஒரு அமைப்பு சாரா தொழிலாளி என்று திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த மே தின விழா நிகழ்ச்சியில் இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ளமே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கருணாநிதி பின்னர் அங்குகூடியிருந்தவர்களிடையே பேசியதாவது:
நாட்டிலேயே முதல் முறையாக மே தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது திமுக அரசுதான். இதைத்தான் பின்னர்அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நாடு ழுவதும் அமல்படுத்தினார்.
20 லட்சம் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு வாரியங்கள் அமைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதும் திமுகஅரசுதான். நாட்டிலுள்ள பல்வேறு தொழிலாளர்கள் போல நானும் கூட ஒரு அமைப்பு சாரா தொழிலாளிதான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்களின் தனித்தன்மையைக் காக்கப்பாடுபடுவோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications