அசாமில் பாஜக வேட்பாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாமில் பாஜக வேட்பாளர் உள்பட 8 பேரை உல்பா தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொன்றனர். இந்தச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலம் திப்ருகார் தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயந்தா தத்தா அலுவலகத்தைத் தாக்கிய தீவிரவாதிகள்,தத்தாவையும் இரண்டு பாஜக தொண்டர்களையும் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக இந்தத் தீவிரவாதிகள் அசாம் கன பரிஷத் அலுவலகத்தையும் தாக்கினர். இதில் பார்பீடா தொகுதிவேட்பாளர் குமார் தீபக் தாஸ் குண்டுக் காயமடைந்தார். இக்கட்சித் தொண்டர் ஒருவரும் மேலும் ஒருபோலீஸ்காரரும் கொல்லப்பட்டனர்.
ஒரு சமதா கட்சித் தொண்டரையும் உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அசாம் கன பரிஷத்தின் தலைவர்மகந்தா உல்பா தீவிரவாதிகளின் இச்செயலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications