சாத்தூரில் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு வெற்றிமுகம்
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரே இந்தமுறையும் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது.
1977 ம் ஆண்டு முதல் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இந்த முறை திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன்,மதிமுக வேட்பாளர் ராஜா சொக்கலிங்கம் ஆகியோருக்கு தொகுதியில் குறைந்த செல்வாக்கே உள்ளது எனலாம்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் மொத்த எம்எல்ஏக்கள் 16 பேரில் இவர்கள் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள்அனைவரும் சுயேட்சைகள்.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் உள்ள தொகுதி சாத்தூர் தொகுதி. இங்கு மொத்தம் 2, 15, 000வாக்காளர்கள் உள்ளனர்.
இவர் எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் இருந்த போது ஒரு தடவை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்தார். தற்போது முதல்வர்கருணாநிதி மற்றும் மேலும் ஸ்டாலினுக்கு இவர் மேல் நல்ல மரியாதை உண்டு.
இவர் மக்கள் தமிழ் தேசம் உள்பட பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதற்கு பெரும் பங்கு வகித்தவர்.
ரெட்டியார், செட்டியார் மற்றும் தலித்துக்கள் ஆகியோர் அதிகம் உள்ள தொகுதி இந்தத் தொகுதி. ரெட்டியார்சமூகத்தைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜமீன்குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்தத் தொகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தீப்பெட்டித்தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்கள். மொத்த வாக்காளர்களில் பாதிபேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை விட தொகுதியில் அதிக செல்வாக்கைப் பெற்றிருப்பவர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். இதனால் இவர் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்றும் கூறலாம்.
மேலும் இந்தத் தொகுதியில் 1962 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வெற்றி பெற்றதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications