ஊழலற்ற ஆட்சி தருவோம்: பாண்டி.யில் ஜெ.பிரச்சாரம்
பாண்டிச்சேரி:
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலற்றஆட்சியைத் தருவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதுதெரிவித்தார்.
ஜெயலலிதா பாண்டிச்சேரியில் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பாண்டிச்சேரியில்தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பேசியதாவது:
அதிமுக கூட்டணி சராசரி மனிதனின் பிரச்சனைகளை அறிந்து அதற்காகக் குரல் கொடுக்கும் கூட்டணியாகும்.
பாண்டிச்சேரியில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது அதிமுக கூட்டணி.பாண்டிச்சேரியில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பதே அதிமுக கூட்டணியின் நோக்கமாகும் என்றார்.
பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதி 10தொகுதிகளை பாமகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது
முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துவாக்கு சேகரித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications