For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்குறிச்சி அருகே வேன் - லாரி மோதல்: 3 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதியதில் சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குசுற்றுலா வந்த 3 பேர் இறந்தனர்.

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (29). இவர் தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில்உள்ள பிளாக் தண்டர் பூங்காவைப் பார்க்க சென்னையிலிருந்து புறப்பட்டனர். வேனில் இளஞ்செழியன் உள்பட 10பேர் இருந்தனர்.

அதிகாலை இந்த வேன் கள்ளக்குறிச்சி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராஜேஸ்வரி (27), ஆகாஷ் (3), டிரைவர் சுப்புராஜ் (28) ஆகியோர்உயிரிழந்தனர். மேலும் 8 பர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X