For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2002-ல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியா தன்னுடைய முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை 2002ஆம் ஆண்டுஜனவரி மாதம் நடத்த இருக்கிறது.

சூர்யா-2 அல்லது அக்னி-4 என்ற பெயரில் இந்த ஏவுகணை தயாராகிக் கொண்டிருக்கிறது என்று பாதுகாப்புஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஒரு செய்தி தெரிவிக்கிறது.

இந்த ஏவுகணை 5,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்க வல்லது.

2003-ல் சோதனை செய்யப்படவிருக்கும் ஏவுகணை 12,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்க வல்லது. 20,000கிலோமீட்டர் தூரம் வரை தாக்க வல்ல ஏவுகணையாக மாற்றவும் சாத்தியங்கள் உள்ளன என்றும் அச்செய்திதெரிவிக்கிறது.

இந்நிலையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைத் தயாரிப்பதாக ஒரு எண்ணமே இல்லை என்றுவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X