வீரப்பன் காட்டில் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி காயம்
ஈரோடு:
வீரப்பன் புதைத்து வைத்திருக்கும் பணத்தை அதிரடிப்படை வீரருடன் தேடச் சென்ற விவசாயிக் கூலித் தொழிலாளிதுப்பாக்கி வெடித்து காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி காட்டுப் பகுதியில் அதிரடிப்படையினர் முகாமிட்டு வீரப்பனைத் தேடும்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வீரப்பன் புதைத்து வைத்திருக்கும் பணத்தைக் கண்டுபிடிக்க அதிரடிப்படையைச் சேர்ந்த தலைமைக்காவலர் ஒருவர் சில விவசாயக் கூலிகளை அழைத்துச் சென்றார். கோமாளம் அருகே உள்ள அரோபாளைத்தைச்சேர்ந்த நடராஜன் (36). சுக்ரி, பழனிச்சாமி ஆகியோரை சாமிநாதன் என்ற ஏட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதிஅழைத்துச் சென்றார்.
அவர்கள் தேவையான ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள், சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பண்ணாரிக் காட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு இடத்தில் தங்கினர். அப்போது நடராஜன், ஏட்டுசாமிநாதன் கொண்டு வந்திருந்த துப்பாக்கியைத் துடைத்துள்ளார்.
அப்போது துப்பாக்கியில் இருந்த ரவை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சிதறலில் நடராஜனின்இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஏட்டு சாமிநாதன், நடராஜனுக்கு ரூ. 300 பணம் கொடுத்துயாரிடமும் இது பற்றி சொல்லக் கூடாது. போலீசில் புகார் கொடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இது பற்றி அதிரடிப்படையினரும் அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.ஆனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications