ஊருக்குள் நுழையாதே: திமுக எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு
செஞ்சி:
தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க.எம்.எல்.ஏவை கிராமத்திற்குள்நுழையவிடமால் மக்கள் தடுத்து நிறுத்தினர். எம்.எல்.ஏவின் சட்டை பிடித்து இழுக்கப்பட்டதால் கிராமத்தில் பதட்டம்நிலவியது.
செஞ்சி தொகுதியில் தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் தமிழ் பா.ம.க. வேட்பாளர் தீரன். இவருக்குஆதவராக ஓட்டு சேகரிக்க செஞ்சி எம்.எல்.ஏ. நடராஜனும், வேட்பாளர் தீரனும் வல்லம் ஒன்றியத்திலிருக்கும்உடையாந்தாங்கல் கிராமத்திற்கு சென்றனர்.
இவர்களை பார்த்ததும் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் அதிகமானோர் கூடி நடராஜனை உள்ளே விடாமல்தடுத்து 5 வருடமாக தொகுதிக்கு வராமல் இப்போது ஏன் வந்தீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
பதிலுக்கு நடராஜனும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்திலிருந்த இளைஞர்நடராஜனின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. வாக்கு சேகரிக்கவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications