ஊட்டி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு: 450 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் மலை ரயில் பெரும் விபத்துக்குள்ளாக இருந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டது.
குன்னூரை அடுத்த ஹில்குரோ அருகே தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விலகல் ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த டிரைவர், மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை நிறுத்தியிருக்காவிட்டால் ரயிலில் பயணம் செய்த 450 பேருக்கும் ஆபத்துவந்திருக்கும். ரயில் கவிழ்ந்திருந்தலோ, பாதையிலிருந்து விலகி இருந்தலோ, பல நூறு அடி ஆழப் பள்ளத்தில் விழுந்திருக்கும்.












Click it and Unblock the Notifications