கள்ள ஓட்டு போடுவதை தடுப்போம்: ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்போம் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக நிறுவனத்தலைவர் தமிழகம் முழுவதும் பாமக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். இறுதியாகச்சென்னையில் அவர் பாமக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.
சென்னையில் அவர் சைதாப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணாநகர், தியாகராயநகர், புல்லாபுரம் மற்றும் பலஇடங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோது கூறியதாவது:
சென்னை திமுகவின் கோட்டை என்று கூறி வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கில் கள்ளஓட்டுப்போட்டால் இப்படித்தான் இருக்கும்.
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதில் முதல்வர் கருணாநிதிக்கு விருப்பமே இல்லை. மக்கள் மனதில்மாற்றம் இருக்கிறது. விழிப்புணர்வு இருக்கிறது.
இந்த முறை திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதைத் தவிர்ப்போம். அதன் மூலம் சென்னையில் 14 தொகுதிகளையும்நாங்களே கைப்பற்றுவோம்.
தமிழகத்தில் 65 சதவீத மக்கள்தான் ஓட்டுப் போடுகிறார்கள். 35 சதவீத மக்கள் ஓட்டுப் போடுவதே இல்லை.அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லையா?
வெளிநாடுகளில் இருப்பது போல் இங்கும் ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் மக்கள்தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications