மிஸ் யுனிவர்ஸ் போட்டி: நேர்முகத் தேர்வு தொடக்கம்
பாயமோன்: (போர்டோரிக்கா)
மிஸ் யுனிவர்ஸ் என அழைக்கப்படும் உலக அழகி போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஒன்றான நேர்முகத் தேர்வு திங்கள்கிழமைதொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் மிஸ். யுனிவர்ஸ். மிஸ். வோர்ல்ட் என்ற பெயரில் உலக அழகி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு மிஸ்.யுனிவர்ஸ் போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள போர்டோரிக்காவில் நடைபெறுகிறது.
உலக அழகி போட்டியில் பல சுற்றுகள் உண்டு. சிறந்த பாரம்பரிய உடை, சிறந்த உடையலங்காரம், சிறந்த நீச்சல் உடை அழகி,சிறந்த தோற்றப் பொலிவு ஆகிய சுற்றுகள் முடிவடைந்துள்ளன.
திங்கள்கிழமை நேர்முகத் தேர்வு தொடங்கியது. இதில் 10 அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் ஒருவர் மிஸ்யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
மிஸ். யுனிவர்ஸ் பட்டம் வெல்பவருக்கு பட்டத்துடன் ரூ 1 கோடி ரொக்கப்பணமும், அவர் விரும்பும் இடத்தில் ஒரு வீடும் கொடுக்கப்படும்.
உலக அழகி போட்டியில் அந்தந்த நாடுகளில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் அழகிகள் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வர்.
இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 77 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் செலினா ஜெட்லிகலந்து கொள்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டத்தை இந்திய அழகிகள் வென்று வருகின்றனர். சென்ற ஆண்டு மிஸ் யுனிவர்சாகலாரா தத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.