ஓட்டுப் போட தமிழகம் தயார்!
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் மாநிலத்திலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10-ம் தேதி தேர்தலுக்கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. புதன்கிழமை ஓய்வு நாள். அதுமுடிந்த பிறகு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 54,916 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்முழு வீச்சில் அனுப்பப்பட்டு வருகின்றன. மொத்தம் நாலே முக்கால் கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்குகிறது. மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. அதற்கு மேல் யாரும்ஓட்டுப் போட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும்பகுதிகள், தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகள் , பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.