For Daily Alerts
Just In
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் போடுவது எப்படி?
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஓட்டுப் போடுவது எப்படி? தெரியுமா உங்களுக்கு?
- வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட 18 வகை ஆவணங்களை தேர்தல் அலுவலரிடம் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வாக்காளர் அடையாளம் சரி பார்க்கப்பட்ட பின் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து அங்குள்ள ரெஜிஸ்டரில் நமது கையெழுத்தை இட வேண்டும்.
- ரெஜிஸ்டரில் கையெழுத்திட்ட பின் ஆள்காட்டி விரலில் அடையாள மை இடப்படும். அது காயும் வரை காத்திருக்க வேண்டும்.
- மை காய்ந்த பின் நம்மை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள அறைக்குச் செல்லுமாறு தேர்தல் அதிகாரி கூறுவார்.
- வாக்குப் பதிவு இயந்திரத்திற்குச் சென்ற பின் அதிகாரி சொல்லியவுடன் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பெயர்கள், சின்னங்களுக்கு அடுத்து இரண்டு பட்டன்கள் இருக்கும். ஒன்று சிவப்பு நிறத்திலும், இன்னொன்று நீலநிறத்திலும் இருக்கும்.
- நாம் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேரே உள்ள நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்படிச் செய்தவுடன் சிவப்பு நிற பட்டன் எரியும். அதைத் தொடர்ந்து பீப் சத்தம் ஒன்று எழுந்து, சில விநாடிகள் நீடிக்கும். அது நின்றவுடன், வாக்கு சரியாக பதிவாகி விட்டது என்று அர்த்தம்.
இவ்ளோதான் வாக்குப் பதிவு. முன்பு மாதிரி பேப்பரை நான்காக மடித்து, அதை வாக்குப்பெட்டிக்குள் போட்டு, குச்சியை வைத்துகுத்தி, கஷ்டப்பட வேண்டியதில்லை.
எனவே, வாக்காளர்களே, உங்களது ஜனநாயகக் கடமையை மறக்காமல், வேகமாக சென்று செலுத்தி விடுங்கள். அதுதான்நாட்டுக்கும், நமக்கும் நல்லது.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Wednesday, May 9, 2001, 5:30 [IST]