அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க என்ன செய்வது?
சென்னை:
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். அனைத்துத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவுநடக்கிறது.
முதலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால்,தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இதையடுத்து அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட ஆவணங்களைக் காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனதேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வருமான வரி செலுத்தியதற்கான பேன் நம்பர் அட்டை, தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ள ஊழியர்அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், விவசாய, அஞ்சலகக் கணக்கு அட்டை,
தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், மாணவர் அடையாள அட்டை, பட்டா, முன்னாள்படைவீரர்களுக்கான ஆவணம், ஓய்வூதிய சான்றிதழ், மறைந்த முன்னாள் ராணுவத்தினரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்குவழங்கப்பட்டுள்ள ஆணைகள்,
ரயில்-பஸ் பாஸ், ஊனமுற்றோருக்கான சான்றிதழ், சுதந்திர போரட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, கிராம அதிகாரியின்சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் ஓட்டு போட அனுமதிக்கப்படும்.