For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா: 140 தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு

By Super
Google Oneindia Tamil News

கண்ணூ

கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை அமைதியாக வாக்குப் பதிவுஆரம்பித்தது.

675 வேட்பாளர்கள் போட்டியிடும் இம்மாநிலத்தில், 2 கோடியே 16 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இவர்களில் 1கோடியே 38 இலட்சம் பேர் பெண்கள். மாநிலம் முழுவதும் 22,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கண்ணூ

இங்கு, கடந்த 1987 தேர்தல் முதல், 200 பேருக்கு மேல் தேர்தல் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.

தேர்தலைச் சாக்காக வைத்து, சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக பழிவாங்கும் படலத்தை சிலர்அரங்கேற்றுவதுதான் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த தேர்தலிலும் இத்தகைய வன்முறை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் இம்மாவட்டத்தில் வன்முறைக்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்காது என்று கேரள அரசும் தேர்தல்கமிஷனும் உத்தரவாதம் கொடுத்துள்ளன.

மாநிலம் முழுவதிலும் 30 கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் கண்ணூ

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக ஆகியகட்சிகளுக்கிடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X