Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயில் பயம்!: காலையிலேயே வாக்களித்துவிட மக்கள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வெயிலுக்கு முன்பே வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடும் தீவிரத்தில் வாக்காளர்கள் உள்ளனர். இதனால் காலை 7 மணிக்குமுன்பே பல வாக்குச் சாவடிகளில் பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

தமிழகம் முழுவதுமே வெயில் மண்டையைப் பிளந்து வருகிறது. இதனால், காலை 11 மணிக்கு முன்பே ஓட்டுபோட்டுவிட மக்கள்ஆர்வம் காட்டி வருகின்றன. முன்பெல்லாம் மாலை 5 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தத் தேர்தலில் மாலை 4 மணிக்கே ஓட்டுப் பதிவு முடிந்துவிடும்.

சென்னையில் ஆலந்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு, பா.ஜ.க. பொதுச் செயலாளர் எல். கணேசன் ஆகியோர் காலை 7 மணிக்கே வந்து வாக்களித்து விட்டுச்சென்றனர்.

மேலூரில் போட்டியிடும் அமைச்சர் செல்வராஜ், மதுரையில் காலையிலேயே வாக்களித்துவிட்டு மேலூர் விரைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+