புதுவையில் தமாகா-பாமக தொண்டர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் உள்ள குறிஞ்சிக்குப்பம் வாக்குச்சாவடியில் தமாகா-பாமக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவும், பாமகவும், காங்கிரசும் இருக்கின்றன. ஆனால் பாண்டிச்சேரியில்அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது பாமக.

இன்றைய வாக்குப்பதிவின் போது, குறிஞ்சிக்குப்பம் வாக்குச்சாவடியில் தமாகா மற்றும் பாமக தொண்டர்களுக்கிடையே பலத்தமோதல் ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் உடனடியாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது அங்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பிற்பகல் 2 மணி வரை 45 சதவிகித அளவு வாக்குப்பதிவு நடந்தது.இம்மாநிலத்திலேயே இதுவரை அதிக அளவாக காரைக்காலில் 51 சதவிகித அளவு வாக்குகள் பதிவாகி இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+