பணிக்கு வராமல் இருக்கும் 1420 மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனைகளில் அவலநிலை! ஷாக் ரிப்போர்ட்!
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்ணிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.

இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் தினகரன் ராஜாமணி
பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம். RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம். 27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இதுவரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!" என கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications