நிருபரை தாக்கிய ரஜினியின் செயலாளர்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் செயலாளர் சத்யநாராயணா தனியார் தெலைக்காட்சிநிறுவனத்தின் நிருபரை தாக்கினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலைமுதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
இன்று மதியம் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துவிட்டு வந்தார். அப்போதுஅவரது செயலாளர் ஏசியா நெட் நிருபர் ஒருவரை தாக்கியது சர்ச்சையைகிளப்பியுள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கூறுகையில். ரஜினிகாந்த் வாக்களிக்கும் போதுபுகைப்படம் எடுப்பதற்காக 5 மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள்காத்திருந்தனர்.
ரஜினிகாந்த் வாக்களித்துவிட்டு காரில் ஏறுவதற்காக வெளியே வந்த போது அவருக்குவழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரது செயலாளர் சத்யநாராயணா அங்கு நின்றுகொண்டிருந்த நிருபர்களை தள்ளினார். ஏசியாநெட் நிருபரின் மூக்கில் குத்தினார்என்றனர்.
தாக்கப்பட்ட நிருபர் கூறுகையில், சத்யநாராயணா புகைப்படக்காரரகளிடம்முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்றார்.
யு.என்.ஐ.