முதல்வர் பதவியேற்க அந்தோணிக்கு கவர்னர் அழைப்பு
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.அந்தோணியை சட்டசபைக் குழுத் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரை கேரள முதல்வராகப் பதவியேற்குமாறு கவர்னர் சுக்தேவ் சிங் காங்அழைப்பு விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏ.கே.அந்தோணி கேரள சட்டசபைக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார்.இதையடுத்து கவர்னர் சுக்தேவ், கேரள முதல்வராகப் பதவியேற்கும்படி, ஏ.கே.அந்தோணியை அழைத்தார்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை ராஜ்பவனில் நடக்கும் எளிய நிகழ்ச்சியில் கேரள முதல்வராகப்பதவியேற்கவுள்ளார் ஏ.கே.அந்தோணி.
ஏ.கே.அந்தோணிக்கு வயது 61. இவர் கேரள காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழுத் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ் கூட்டணியில் மேலும் 8 கட்சிகள்இடம்பெற்றுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications