6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ. ஆவதில் பிரச்சனை இல்லை: ஜெ.
சென்னை:
அடுத்த 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஆவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டபிறகு ஜெயலலிதா புதன்கிழமை காலைஎம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள நான் அடுத்த 6மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஆகி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் அதிமுககூட்டணி அருதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
கவர்னர் எடுத்துள்ள முடிவை யாரும் குறை கூற முடியாது. ஏனெனில் கவர்னர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்நீதிபதியாக இருந்தவர். அவருக்கு எல்லா சட்ட நுணுக்கங்களும் தெரியும்.
அவரை யாரும் குறை கூற வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு சட்டத்தைப் பற்றி யாரும் அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லை.
வெகு விரைவில் நான் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசுவேன். பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்குஅதிமுக ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. இதுகுறித்து புதன்கிழமை பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications