For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. முதல்வரானதற்கு பத்திரிக்கைகள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதை பல பத்திரிக்கைகளும் குறை கூறியுள்ளன.

ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத ஜெயலலிதாமுதல்வரானதற்கு பத்திரிக்கைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக பதவிவகித்தார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வென்றது. முதல்வராக கருணாநிதி பதவி ஏற்றார்.

அதன் பின் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தார் கருணாநிதி.ஜெயலலிதா மீது 47 வழக்குகள் தொடரப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு தண்டனையும் கிடைத்தது. விடுதலையும் கிடைத்தது. டான்சி நில பேர ஊழல் வழக்கில் 3ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட காரணத்தால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கப்படவில்லை. அவர் தாக்கல் செய்த 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால் தொடர்ந்து அ.தி.மு.க. அணியை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. வியாழக்கிழமைதேர்தல் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பான்மைபெற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X