புலிகள் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் வவுனியா பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 12 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 21 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் மறைந்திருக்கும்காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்பியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம்நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வவுனியாவில் உள்ள செடிகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள்படுகாயமடைந்தனர்.
வவுனியாவிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசிக்குளம் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபகுதியில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு ராணுவ வீரர் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 6 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அசிக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று புலிகள்கூறியுள்ளனர்.
திரிகோணமலை பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் புலிகள்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.