ஊட்டியில் குளு குளு சீசன் ஆரம்பம்
ஊட்டி:
ஊட்டியில் குளு குளு சீசன் தொடங்கியது. மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. வெள்ளிக்கிழமை மலர்க்கண்காட்சியும் தொடங்கியது.
சுட்டெரிக்கும் அக்னி வெப்பத்தில் ஆறுதல் தரும் சுற்றுலாத் தளங்களில் குளுகுளு ஊட்டியும் ஒன்று. நீலகிரிமாவட்டத்தில் மலை மீது அமைந்துள்ள சிறப்பான சுற்றுலாத் தளம் ஊட்டி. கொளுத்தும் வெயிலையும் கூடஇதமாக்கி, கண்களைக் குளிர்விக்கிறது இந்நகரம்.
வண்ணமயமான மலர்களைத் தாங்கி பயணிகளை வரவேற்று, மன மகிழச் செய்யும் ரோஜாத் தோட்டம் பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளது. வெல்வெட் மெத்தை போன்ற பச்சைப் புல்வெளியில் மக்கள் இளைப்பாறிவருகின்றனர்.
ஊட்டியில் வெள்ளிக்கிழமை மலர்க்கண்காட்சி துவங்கியது. இந்தக் கண்காட்சி, இரண்டு நாட்கள் கோலாகலமாகநடக்கிறது. தாவரவியல் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், படகுத் துறையில்படகு சவாரியும், அங்கு நிலவும் குளுமையான சூழல், புல்தரை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை மிகவும்கவர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு தேயிலைப் பிரச்னையால் தத்தளித்த நீலகிரி, இந்த ஆண்டு புத்துயிர் பெற்று பொலிவுடன்திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி அக்னி வெப்பத்தை தணித்துக் கொள்ள ஊட்டிக்கு வந்த வண்ணம்உள்ளனர்.