வேன்- பஸ் மோதல்: 5 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 45பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 50 பேர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டுதஞ்சாவூர் நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, புதுக்கோட்டை, காடவராயன் திடலைச் சேர்ந்த சிலர் கந்தர்வகோட்டைக்கு அருகே அமைந்திருக்கும்வீரகாளியம்மன் கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களும் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45 பேர் படுமாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+