"கஜானாவை காலி செய்து விட்டார் கருணாநிதி
சென்னை:
தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டுப் போய் விட்டார் கருணாநிதி என்று மாநில நிதியமைச்சர்சி.பொன்னையன் கூறியுள்ளார்.
நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்பு அமைச்சர் பொன்னையன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு முதல்முறையாகப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், மே 14-ம் தேதி ஆட்சியை விட்டு கருணாநிதிபோனபோது கஜானாவையும் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.
ரூ. 250 கோடிக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டது திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகம் வரிகள்விதிக்கும் மாநிலம் தமிழகம்தான். இந்த நிலையில் நான் வேறு வரிகள் போட்டு மக்களை சிரமப்படுத்தவிரும்பவில்லை.
இருப்பினும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இப்போதுள்ள நிதி வசதி போதாது. எனவே எங்கெல்லாம் பணம் திரட்டமுடியுமோ அந்த வழிகளில் நிதியாதாரத்தை சீர் செய்வோம்.
தமிழக போக்குவரத்துத் துறை ரூ. 2200 கோடி நஷ்டத்தில் உள்ளது. மின்சாரத் துறைக்கு ரூ. 800 கோடி மானியம்வழங்கப்படுகிறது. இது இலவச மின்சாரத்திற்கான செலவாகும்.
லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கும் எண்ணம் எங்களது அரசுக்குஇல்லை என்றார் அவர்.