ஜெ.க்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் கோரிக்கை
கொழும்பு:
இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்இலங்கை வட கிழக்கு பகுதியின் முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில்வாழும் தமிழ் மக்கள் துன்பத்தில் வாடி வருகிறார்கள். இந்தியாவும், இலங்கையும் இணைந்து இனப்பிரச்சனையைமுடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நீங்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது தமிழக மக்கள் உங்கள் மேலும், உங்கள் கட்சி மேலும் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.
ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல். ஏஃப்) இயக்கத் தலைவர் பத்மாநாபா தி.மு.க. ஆட்சியின்போது சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
நீங்கள் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை மேற் கொள்ள வேண்டும் எனகூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications