பாண்டி. முதல்வருக்கு ஏற்பட்ட நூதன சிக்கல்
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள ப.சண்முகத்திற்கு நூதனமான சோதனை ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணிஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வராக மீண்டும் ப.சண்முகம் பொறுப்பேற்கவுள்ளார்.
முதல்வர் பதவியேற்கவுள்ள சண்முகம் இப்போது எம்.எல்.ஏவாக இல்லை. எனவே 6 மாதத்திற்குள் ஏதாவது ஒருதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் அவரது முதல்வர் பதவி நிலைக்கும். இல்லாவிட்டால் பதவிகாலியாகி விடும்.
இந்த இடத்தில்தான் சிக்கல் எழுந்துள்ளது. சண்முகம் போட்டியிடுவதற்கு வசதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்யாரும் ராஜினாமா செய்து தொகுதி தானம் செய்யத் தயாரில்லை என்று தெரிகிறது. இதனால் சண்முகம்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஜெயித்துள்ள 11 தொகுதிகளில் 3 தொகுதிகள் தனித் தொகுதிகள். பிற தொகுதிகளில் முன்னாள்முதல்வர் வைத்தியலிங்கம், அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் பாரூக் மகன் வெற்றி பெற்ற தொகுதிஆகியவை சண்முகத்திற்குக் கிடைக்காது. மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்காது.
இந்த வினோதமான சூழ்நிலையால் சண்முகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 2எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே அவர்களும் தங்களது தொகுதியைத் தருவதாக இல்லை.
இந்த நிலையில் அ.தி.மு.கவின் உதவியை நாடுவதைத் தவிர சண்முகத்திற்கு வேறு வழியில்லை. அ.தி.மு.க.ஜெயித்த 3 தொகுதிகளில் மண்ணடிப்பட்டு தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என்று சண்முகம் நினைக்கிறார்.ஆனால் இங்கு ஜெயித்துள்ளவர் முன்னாள் முதல்வரும், சட்டசபை அ.தி.மு.க தலைவருமானடி.ராமச்சந்திரன். அவர் தனக்காக ராஜினாமா செய்வாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார் சண்முகம்.
இதுகுறித்து விவாதிக்கவே சென்னைக்கு வந்துள்ளார் சண்முகம். தனக்காக டி.ராமச்சந்திரன் தொகுதியைத் தரவேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெகிகிறது. ஜெயலலிதா சொன்னால்டி.ராமச்சந்திரன் கேட்பார் என்பதால் ஜெயலலிதா முலம் காய் நகர்த்த முயல்கிறார் சண்முகம்.
இதுதவிர அ.தி.மு.கவையும் அமைச்சரவையில் சேருமாறு சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக்கோரிக்கையை ஜெயலலிதா ஏற்றாரா என்பது தெரியவில்லை.
சண்முகத்திற்கு ஏற்பட்டுள்ள நூதனமான சிக்கல் தீருமா என்பது நாள் போகப் போகத்தான் தெரியும்.