ராஜீவை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமைஅனுசரிக்கப்பட்டது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமைந்துள்ளசமாதியில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு அமைப்பின்பிரதிநிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராஜீவ் நினைவு தினம், பயங்கரவாத ஒழிப்பு தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டிசென்னை ஆளுநர் மாளிகை ஊழியர்கள், ஆளுநர் பாத்திமா பீவி தலைமையில், பயங்கரவாத ஒழிப்புஉறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications