ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மோசடி: 2 பேர் சஸ்பென்ட்
சேலம்:
வட்டாரப் போக்குவரத்துக் கழக (ஆர்.டி.ஓ) அலுவலக ரசீதை திருத்தி ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டுஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். புரோக்கர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அளவுக்கு அதிமான பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது முறை. டன்னுக்கு ஆயிரம் ரூபாய்வீதம் 2000 ம் வரை இந்த அபராதம் இருக்கும். இந்த அபராதத்தை புரோக்கர்கள் மூலம் அலுவலகத்திற்குச்செலுத்தி வந்தனர் லாரி உரிமையாளர்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளமின்னணு இயந்திரம் பழுதடைந்தது. இதனையடுத்து கையால் எழுதி ரசீது வழங்கினர். அப்போது, ஆர்.டி.ஓஅலுவலகத்தில் இந்த வசூல் தொகையை கையால் திருத்தி ரசீதில் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை ஊழியர் சகுந்தலா மற்றும்டைப்பிஸ்ட் சுரேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும், சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சங்கர்(24), தங்கராஜ் (29) ஆகிய புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications