மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கிறது
இம்பால்:
மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏக்கள் முதல்வர் கொய்ஜமுக்கு எதிராகவாக்களித்ததையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கிறது. மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக சமதா கட்சி ஆட்சிநடத்தி வந்தது. பாஜகவும் சமதா கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள எதிர்க்கட்சியான மணிப்பூர் முன்னேற்றக் காங்கிரஸ் திடீரென்று பாஜகஎம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு கொடுத்தது.
இதனால் பாஜகவின் பலம் கூடியது. இதையடுத்து பாஜக ஆட்சியமைக்க முயன்றது. முறையாக முதல்வர் கொய்ஜம்நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து கொய்ஜம் அரசு நம்பிக்கைவாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
நம்பிக்கை தீர்மானித்தை ஆதரித்து 17 எம்.எல்.ஏ.க்களும், தீர்மானத்தை எதிர்த்து 39 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட்டனர்.
இதையடுத்து கொய்ஜம் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் மணிப்பூரில் பாஜகஆட்சியமைக்கவுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications