ஜெ. முதல்வராக செயல்படுவதை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதை ரத்து செய்யும்படிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரால் தேர்தலில்போட்டியிட முடியவில்லை. இருப்பினும், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஜெயலலிதா சட்டசபை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து அவரை முதல்வராகப் பதவியேற்கும்படி ஆளுநர் பாத்திமா பீவி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிப்பது முறைகேடானது எனவே அவர் முதல்வராகசெயல்பட தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் மற்றும்சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா முதல்வராக செயல்பட்டால் அவர் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வெளியாவதுபாதிக்கப்படும். நீதிபதிகள் தீர்ப்புகளை வெளியிடுவதற்கு அஞ்சுவார்கள்.

ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரே அவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம்செய்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

மனுவை ஏற்ற நீதிபதிகள், கோடை விடுமுறைக்குப் பின் இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றுஅறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+